Friday, May 15, 2015

On Friday, May 15, 2015 by Tamilnewstv in    

நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செவனா கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2005 ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.பின்னர் போதுமான இடவசதி இல்லை என காரணம் சொல்லி சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது போரடி பெற்ற மற்றொரு தரம் உயர்த்தும் திட்டம் மதுரைக்கு போனது தேர்தல் வாக்குறுதியாக அஇஅதிமுக பொதுச்செயலாளருமான முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா திருச்சி மருத்துவ மனை தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார் இந்த நிலையில் 28.2.15 அன்று தமிழகத்;திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவ மனையை மத்திய அரசு அறிவித்து அதற்குரிய இடத்தை பரிந்துரைக்க தமிழக அரசை கோரியது  தமிழக அரசு திருச்சியை தவிர்த்து செங்கல்பட்டு பெருந்துறை செங்கிப்பட்டி புதுக்கோட்டை தோப்பூர் ஆகிய இடங்களை பரிந்துறை செய்துள்ளது எய்ம்ஸ் மருத்துவமணை என்பது சுமார் 100 ஏக்கர் முதல் 300 ஏக்கர் நில பகுதியில் அமைய பெற்றுது. இந்தியாவில் தற்போது 7 நகரங்களில் மத்திய சுகாதாரத்துறையின் நேரடி நிர்வாகத்;தில் இயங்கி வருகிறது. 7 அதி சிறப்பு துறைகளும் 45 மருத்துவதுறைகளும் சிறந்த மருத்துவ நிபுணர்கள் அதி நவீன கருவிகளும் உள்ளடக்கியதாக இருக்கும் இம் மருத்துவமனை ஏழை எளியோர் தரமான சிகிச்சை பெற இயலும் என்பதற்கான  இந்த அடையாள உண்ணாவிரதம் என்று தெரிவித்தார்

0 comments: