Monday, July 06, 2015

On Monday, July 06, 2015 by Unknown in ,    
கோவில் திருவிழாவுக்காக பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர மறுத்ததால், மனமுடைந்த பிளஸ்–2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8–வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சூர்யா (வயது 17). பிளஸ்–2 படித்து வந்தார்.
அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி, சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து பிளக்ஸ் பேனர் வைக்க முயற்சி செய்துள்ளார். இதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டார்.
படிக்கிற வயதில், பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டுமா? என்று பெற்றோர் சூர்யாவுக்கு அறிவுரை கூறியதுடன், இதற்காக பணம் தரவும் மறுத்துவிட்டனர்.
இதனால் மனமுடைந்த சூர்யா, நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷ மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார்.

0 comments: