Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Tamilnewstv in    

இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐந்து கடமைகளில் இறுதி கடமை மக்காவில் ஹஜ் என்ற புணித பயணம் மேற்கொள்வது.அந்த கடமையை நிறைவேற்றுவதற்கு திருச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது அமானுல்லா அவருடைய மனைவி ரமிஜான் வயது 51 அவருடைய மகன் மருமகள் ஆகியோர்  இந்த மாதம் 04.09.2015 அன்று ஹஜ் புணித பயணம் சென்றனர்.மக்கா அருகே உள்ள மினா என்ற இடத்தில் சைத்தான் மீது கல் எறிவார்கள் .அந்த கல் எறியும் இடத்தில் லட்சகணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றாக சேரும் போது அந்த இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி அமானுல்லா அவருடைய மனைவி ரமிஜான் மூச்சு திணறி உயிரிழந்தார்.அவருடைய இறப்பு செய்தியை அவருடைய கணவர் மற்றும் மகன் மருமகள் மூலம் திருச்சியில் இருக்கும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.திருச்சியிலிருக்கும் அவருடைய உறவினரிடம் விசாரித்த போது அவருடைய இறுதி சடங்கு மக்காவில் உள்ள ஜன்னத்துல் மாலா என்ற இடத்தில் நடைபெறும் என்று கூறினர்கள்.

0 comments: