Sunday, January 10, 2016

On Sunday, January 10, 2016 by Tamilnewstv   


     திருச்சி  10.01.16
  
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 74 விவசாய சங்கத்தினர் இணைந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் மீதுள்ள கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வளங்கவேண்டியும், 58 வயதடைந்த அணைத்து விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளிக்கும் மாதம்தோறும் ரூ.5000 ம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பினர்.
பேட்டி - திரு தெய்வசிகாமணி - அமைப்பாளர் விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம்.

0 comments: