Wednesday, May 11, 2016

On Wednesday, May 11, 2016 by Unknown in ,    



திருப்பூர்,  ஈரோடு ரயில்வே மக்கள் பணிச் சங்கத்தின் தேர்தல் சிறப்பு கூட்டம் மூலனூர் ஆத்மஞான சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. சங்க பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி தலைமை வகித்தார். சிதம்பரசாமி முன்னிலை வகித்தார். செல்வக்குமார், ராமசாமி, சண்முகம், கருப்புசாமி, நல்லசிவம், தண்டபாணி, மருதுபாண்டி, சந்திரக்குமார், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில் திட்டம் நிறைவேற்றிட வாக்குறுதி தந்த திமுக கூட்டணி வேட்பாளர் காளிமுத்து (தாராபுரம்) வெற்றிக்கு பாடுபடுவது. பழனி-ஈரோடு ரயில் திட்டம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றமைக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு ரயில்வே பணிச்சங்கம் மூன்று மாவட்டங்களின் சார்பாக தெரிவித்துகொள்கிறது.

0 comments: