Wednesday, May 11, 2016
உடுமலை, :உச்சநீதிமன்ற உத்தரவை தொடர் ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் 36 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்த முதலைப் பண்ணை மூடப்பட்டது. இதனால் அமராவதி அணையின் மவுசு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இதன் அருகே 1976ம் ஆண்டில் முதலைப் பண்ணை துவக்கப்பட்டது. முதலைகளை காப்பாற்றும் வகையில் மாணவ, மாணவிகள், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பண்ணை அமைக்கப்பட்டது.
தற்போது இப்பண்ணையில் 94 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 26 கிலோ மாட்டிறைச்சி, 9 கிலோ மீன்கள் இரையாக வழங்கப்படுகிறது. இங்குள்ள முதலைகள் நன்னீர் மற்றும் சதுப்பு நிலப்பகுதியில் வாழும் இனத்தை சேர்ந்தவை. பெண் முதலை 8 அடி நீளம், ஆண் முதலை 10 அடி நீளம் வரை வளரக்கூடியவை. முதலைப்பண்ணையை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணமாக 50 காசு வசூல் செய்யப்பட்டது. சீசன் காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நுழைவு கட்ட ணம் மூலம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.
மற்ற மாதங்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். முதலைகளை பராமரிக்க இத்தொகை செலவிடப்பட்டது. நாட்டில் உள்ள புலிகள் சரணாலயத்தில் புலிகளை காக்கும் வகையில் எந்தவித சுற்றுலா நடவடிக்கையும் இருக்கக் கூடாது என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அமராவதி வனச்சரகத்தில் உள்ள அமராவதி அணை முதலைப்பண்ணையும் நேற்று மூடப்பட்டது.
முதலைகளை பார்க்க நேற்று ஆவலுடன் சென்ற சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். முதலைப்பண்ணை இருந்ததால்தான் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது அதுவும் மூடப்பட்டதால் அணையின் மவுசு குறைந்துவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

0 comments:
Post a Comment