Wednesday, May 11, 2016
உடுமலை, :உச்சநீதிமன்ற உத்தரவை தொடர் ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் 36 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்த முதலைப் பண்ணை மூடப்பட்டது. இதனால் அமராவதி அணையின் மவுசு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இதன் அருகே 1976ம் ஆண்டில் முதலைப் பண்ணை துவக்கப்பட்டது. முதலைகளை காப்பாற்றும் வகையில் மாணவ, மாணவிகள், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பண்ணை அமைக்கப்பட்டது.
தற்போது இப்பண்ணையில் 94 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 26 கிலோ மாட்டிறைச்சி, 9 கிலோ மீன்கள் இரையாக வழங்கப்படுகிறது. இங்குள்ள முதலைகள் நன்னீர் மற்றும் சதுப்பு நிலப்பகுதியில் வாழும் இனத்தை சேர்ந்தவை. பெண் முதலை 8 அடி நீளம், ஆண் முதலை 10 அடி நீளம் வரை வளரக்கூடியவை. முதலைப்பண்ணையை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணமாக 50 காசு வசூல் செய்யப்பட்டது. சீசன் காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நுழைவு கட்ட ணம் மூலம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.
மற்ற மாதங்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். முதலைகளை பராமரிக்க இத்தொகை செலவிடப்பட்டது. நாட்டில் உள்ள புலிகள் சரணாலயத்தில் புலிகளை காக்கும் வகையில் எந்தவித சுற்றுலா நடவடிக்கையும் இருக்கக் கூடாது என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அமராவதி வனச்சரகத்தில் உள்ள அமராவதி அணை முதலைப்பண்ணையும் நேற்று மூடப்பட்டது.
முதலைகளை பார்க்க நேற்று ஆவலுடன் சென்ற சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். முதலைப்பண்ணை இருந்ததால்தான் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது அதுவும் மூடப்பட்டதால் அணையின் மவுசு குறைந்துவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment