Wednesday, May 11, 2016
பல்லடம், : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட புதுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 21 லட்சம் செலவில் இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கட்டிடத்திற்கு திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் திறப்பு விழாவுடன் இதற்கு மூடு விழாவும் நடந்தது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக இந்த துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.ஆனால் இன்று வரை திறக்காமல் உள்ளது. இதுகுறித்து கேட்டால் இந்த துணை சுகாதார நிலையத்திற்கு இன்னும் மருத்துவர்கள் பணியமர்த்தப்படவில்லை கூடிய விரைவில் மருத்துவர்கள் வருவார்கள் என்று கூறுகின்றனர் என்றனர். மேலும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் பொது மக்கள் பயன் பாட்டிற்கு வராமல் வீணாக உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

0 comments:
Post a Comment