Wednesday, May 11, 2016
பல்லடம், : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட புதுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 21 லட்சம் செலவில் இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கட்டிடத்திற்கு திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் திறப்பு விழாவுடன் இதற்கு மூடு விழாவும் நடந்தது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக இந்த துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.ஆனால் இன்று வரை திறக்காமல் உள்ளது. இதுகுறித்து கேட்டால் இந்த துணை சுகாதார நிலையத்திற்கு இன்னும் மருத்துவர்கள் பணியமர்த்தப்படவில்லை கூடிய விரைவில் மருத்துவர்கள் வருவார்கள் என்று கூறுகின்றனர் என்றனர். மேலும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் பொது மக்கள் பயன் பாட்டிற்கு வராமல் வீணாக உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment