Wednesday, May 11, 2016
பல்லடம், : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட புதுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 21 லட்சம் செலவில் இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கட்டிடத்திற்கு திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் திறப்பு விழாவுடன் இதற்கு மூடு விழாவும் நடந்தது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக இந்த துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.ஆனால் இன்று வரை திறக்காமல் உள்ளது. இதுகுறித்து கேட்டால் இந்த துணை சுகாதார நிலையத்திற்கு இன்னும் மருத்துவர்கள் பணியமர்த்தப்படவில்லை கூடிய விரைவில் மருத்துவர்கள் வருவார்கள் என்று கூறுகின்றனர் என்றனர். மேலும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் பொது மக்கள் பயன் பாட்டிற்கு வராமல் வீணாக உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment