Wednesday, May 11, 2016
அனுப்பர்பாளையம்,; அவிநாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், அவிநாசி பேரூராட்சி பகுதியில் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு பெண்கள் திரண்டுவந்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.அவிநாசி(தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இ.ஆனந்தன் நேற்று அவிநாசி பேரூராட்சியில் தாலூகாஅலுவலகம், சீனிவாசபுரம், வள்ளுவர் வீதி,வ.உ.சிபார்க் வீதி, நேருவீதி, சிந்தாமணி, ராயம்பாளையம், சக்திநகர், புதிய பேருந்துநிலைய்ம், பழைய பேருந்துநிலையம், வாணியர்வீதி, காந்திபுரம், சுகாதார ஊழியர்வீதி, கஸ்தூரிபாய்வீதி, மங்கலம்ரோடு, வடக்குரதவீதி, சூளை, சாளையப்பாளையம் உள்ளிட்ட 34 பகுதிகளுக்கு சென்று, பொது மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது, கடந்த திமுக ஆட்சியில் செய்த எண்ணற்ற சாதனைகளையும், தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்புகளையும் எடுத்துரைத்து, உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது ஆனந்தன் பேசுகையில், அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் பல வருடங்களாக குடிநீர் பஞ்சம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றுவோம். தொகுதியில் சாக்கடை வசதி, தார்சாலைவசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன் என்றார்.
திமுக வேட்பாளர் ஆனந்தனுடன், அவிநாசி ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் அவிநாசி தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, அவிநாசி நகர திமுக செயலாளர் பொன்னுசாமி, காங்கிரஸ் கமிட்டி புறநகர் மாவட்ட தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment