Wednesday, May 11, 2016

On Wednesday, May 11, 2016 by Unknown in ,    




அனுப்பர்பாளையம்,; அவிநாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், அவிநாசி பேரூராட்சி பகுதியில் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு பெண்கள் திரண்டுவந்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.அவிநாசி(தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இ.ஆனந்தன் நேற்று  அவிநாசி பேரூராட்சியில் தாலூகாஅலுவலகம், சீனிவாசபுரம், வள்ளுவர் வீதி,வ.உ.சிபார்க் வீதி, நேருவீதி, சிந்தாமணி, ராயம்பாளையம், சக்திநகர், புதிய பேருந்துநிலைய்ம், பழைய பேருந்துநிலையம், வாணியர்வீதி, காந்திபுரம், சுகாதார ஊழியர்வீதி, கஸ்தூரிபாய்வீதி, மங்கலம்ரோடு, வடக்குரதவீதி, சூளை, சாளையப்பாளையம் உள்ளிட்ட 34  பகுதிகளுக்கு  சென்று, பொது மக்களை சந்தித்து  உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். 

அப்போது, கடந்த திமுக ஆட்சியில் செய்த எண்ணற்ற சாதனைகளையும், தற்போதைய  திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்புகளையும்  எடுத்துரைத்து,  உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது ஆனந்தன் பேசுகையில், அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் பல வருடங்களாக குடிநீர் பஞ்சம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றுவோம். தொகுதியில் சாக்கடை வசதி, தார்சாலைவசதி,   உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன் என்றார். 

திமுக வேட்பாளர் ஆனந்தனுடன், அவிநாசி  ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் அவிநாசி தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி,  அவிநாசி நகர திமுக செயலாளர் பொன்னுசாமி, காங்கிரஸ் கமிட்டி புறநகர் மாவட்ட தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட  திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்

0 comments: