Wednesday, May 11, 2016
அனுப்பர்பாளையம்,; அவிநாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், அவிநாசி பேரூராட்சி பகுதியில் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு பெண்கள் திரண்டுவந்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.அவிநாசி(தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இ.ஆனந்தன் நேற்று அவிநாசி பேரூராட்சியில் தாலூகாஅலுவலகம், சீனிவாசபுரம், வள்ளுவர் வீதி,வ.உ.சிபார்க் வீதி, நேருவீதி, சிந்தாமணி, ராயம்பாளையம், சக்திநகர், புதிய பேருந்துநிலைய்ம், பழைய பேருந்துநிலையம், வாணியர்வீதி, காந்திபுரம், சுகாதார ஊழியர்வீதி, கஸ்தூரிபாய்வீதி, மங்கலம்ரோடு, வடக்குரதவீதி, சூளை, சாளையப்பாளையம் உள்ளிட்ட 34 பகுதிகளுக்கு சென்று, பொது மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது, கடந்த திமுக ஆட்சியில் செய்த எண்ணற்ற சாதனைகளையும், தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்புகளையும் எடுத்துரைத்து, உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது ஆனந்தன் பேசுகையில், அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் பல வருடங்களாக குடிநீர் பஞ்சம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றுவோம். தொகுதியில் சாக்கடை வசதி, தார்சாலைவசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன் என்றார்.
திமுக வேட்பாளர் ஆனந்தனுடன், அவிநாசி ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் அவிநாசி தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, அவிநாசி நகர திமுக செயலாளர் பொன்னுசாமி, காங்கிரஸ் கமிட்டி புறநகர் மாவட்ட தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

0 comments:
Post a Comment