Wednesday, May 11, 2016
அனுப்பர்பாளையம்,; அவிநாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், அவிநாசி பேரூராட்சி பகுதியில் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு பெண்கள் திரண்டுவந்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.அவிநாசி(தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இ.ஆனந்தன் நேற்று அவிநாசி பேரூராட்சியில் தாலூகாஅலுவலகம், சீனிவாசபுரம், வள்ளுவர் வீதி,வ.உ.சிபார்க் வீதி, நேருவீதி, சிந்தாமணி, ராயம்பாளையம், சக்திநகர், புதிய பேருந்துநிலைய்ம், பழைய பேருந்துநிலையம், வாணியர்வீதி, காந்திபுரம், சுகாதார ஊழியர்வீதி, கஸ்தூரிபாய்வீதி, மங்கலம்ரோடு, வடக்குரதவீதி, சூளை, சாளையப்பாளையம் உள்ளிட்ட 34 பகுதிகளுக்கு சென்று, பொது மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது, கடந்த திமுக ஆட்சியில் செய்த எண்ணற்ற சாதனைகளையும், தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்புகளையும் எடுத்துரைத்து, உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது ஆனந்தன் பேசுகையில், அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் பல வருடங்களாக குடிநீர் பஞ்சம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றுவோம். தொகுதியில் சாக்கடை வசதி, தார்சாலைவசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன் என்றார்.
திமுக வேட்பாளர் ஆனந்தனுடன், அவிநாசி ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் அவிநாசி தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, அவிநாசி நகர திமுக செயலாளர் பொன்னுசாமி, காங்கிரஸ் கமிட்டி புறநகர் மாவட்ட தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment