Friday, July 01, 2016
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக மாபெரும் உலகப்பணத்தாள்கள் நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் கண்காட்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜேஸ்வரி அரங்கில் நடைபெற்றது.
இதில் தமிழகம் அல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் பார்வைக்கு பழங்கால நாணயங்கள், பணத்தாள்கள், தபால்தலைகள், விலைமதிப்பு மிக்க கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் வரலாற்று மரபுபடி புவியியல் அடிப்படையில் ஆசிய கண்டத்திலுள்ள 50 நாடுகளின் ரூபாய் நோட்டுக்கள் நாணயங்கள் இடம் பெற்றிருந்தன.
தென் அமெரிக்காவில் உள்ள 12 நாடுகளின் பல்வேறு பணத்தாள்களும் நாணயங்களும் காட்சியில் பிரமிப்பை ஏற்படுத்தின. விழாவில் தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்களும் தங்கள் சேகரிப்பை முகம் சுழிக்காமல் பள்ளி மாணவர்களுக்கு காட்டியதோடு விளக்கம் அளித்தும் குழந்தைகளை சந்தோஷப்படுத்தி வருகின்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய ரூபாயில் தற்போது பயன்பாட்டில் உள்ள குறியீடை வடிவமைத்த உதயகுமார், தென்னிந்திய செயலாளர் ரோலன்ட்ஸ் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் இந்திய தபால்துறையின் சார்பாகவும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது முதல் நாளான இன்றே பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்களுடன் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச்சென்றனர்.
ஜூலை 1,2,3 ஆகிய தேதிகள் நடைபெறும் இக்கண்காட்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் குழந்தைகளுக்கு நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருச்சி பணத்தாள் சேகரிப்போர் சங்கத்தலைவர் விஜயகுமார் கேட்டுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
0 comments:
Post a Comment