Friday, July 01, 2016
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக மாபெரும் உலகப்பணத்தாள்கள் நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் கண்காட்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜேஸ்வரி அரங்கில் நடைபெற்றது.
இதில் தமிழகம் அல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் பார்வைக்கு பழங்கால நாணயங்கள், பணத்தாள்கள், தபால்தலைகள், விலைமதிப்பு மிக்க கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் வரலாற்று மரபுபடி புவியியல் அடிப்படையில் ஆசிய கண்டத்திலுள்ள 50 நாடுகளின் ரூபாய் நோட்டுக்கள் நாணயங்கள் இடம் பெற்றிருந்தன.
தென் அமெரிக்காவில் உள்ள 12 நாடுகளின் பல்வேறு பணத்தாள்களும் நாணயங்களும் காட்சியில் பிரமிப்பை ஏற்படுத்தின. விழாவில் தனிப்பட்ட முறையில் பல்வேறு நபர்களும் தங்கள் சேகரிப்பை முகம் சுழிக்காமல் பள்ளி மாணவர்களுக்கு காட்டியதோடு விளக்கம் அளித்தும் குழந்தைகளை சந்தோஷப்படுத்தி வருகின்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய ரூபாயில் தற்போது பயன்பாட்டில் உள்ள குறியீடை வடிவமைத்த உதயகுமார், தென்னிந்திய செயலாளர் ரோலன்ட்ஸ் நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் இந்திய தபால்துறையின் சார்பாகவும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது முதல் நாளான இன்றே பல்வேறு பள்ளிகளைச்சார்ந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்களுடன் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச்சென்றனர்.
ஜூலை 1,2,3 ஆகிய தேதிகள் நடைபெறும் இக்கண்காட்சியை குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டும் குழந்தைகளுக்கு நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை சேகரிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருச்சி பணத்தாள் சேகரிப்போர் சங்கத்தலைவர் விஜயகுமார் கேட்டுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...



0 comments:
Post a Comment