Thursday, August 18, 2016

On Thursday, August 18, 2016 by Tamilnewstv in
திருச்சி 18.8.16               சபரிநாதன் 9443086297
திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
திருச்சி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பின் பேரில் தொழிற்சங்க தலைவர்கள் வணிகர் சங்கங்களின் தலைவர்கள் பங்கு கொண்ட கூட்டுக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள எஸ்ஆர்எம்யு ஆலுவளகத்தில் நடைபெற்றது.
அதன் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் விவசாயசங்க தலைவர்; பிஆர் பாண்டியன் கூறுகையில் வரும் ஆகஸ்ட்25ல் நடைபெற இருந்த முழு அடைப்பு போரட்டம் அன்று அரசு விடுமுறை என்பதால் முழு வெற்றி  பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழகம் தழுவிய மாபெறும் முழு அடைப்பு  வேலைநிறுத்தம் ரயில் மறியல்போராட்டம் நடத்துவது என தீர்மானித்து நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ரயில்வே தொழிலாளர்கள் நு{ற்பாலை உள்ளிட்ட அனைத்து தொழிலாளாகள் பொதுத்துறை  பெல் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள்; ஈடுபடுவது என தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் தொமுச சண்முகம் தலைமை வகித்தார் பிஆர்.பாண்டியன் வரவேற்புரையாற்றினார். ராஜாஸ்ரீதர்எஸ்ஆர்எம்யூபொதுச்செயலாளர் சுகுமாரன்  தொமுச நெய்வேலி நிலக்கரிசுரங்கம் கோவிந்த ராஜீலு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் முன்னிலையாற்றினர்.

பேட்டி பாண்டியன்