Wednesday, September 28, 2016
திருப்பூர்,2020–ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜா எம்.சண்முகம் நேற்று கூறினார்.புதிய நிர்வாகிகள்
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஏ.சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் ஆண்டறிக்கை மற்றும் வரவு–செலவு கணக்கை தாக்கல் செய்தார்.இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியான வக்கீல் ராமமூர்த்தி அறிவித்தார். தலைவராக ராஜா எம்.சண்முகம், துணைத்தலைவராக வேலுசாமி, பொதுச்செயலாளராக விஜயகுமார், இணைச்செயலாளராக சம்பத்குமார், பொருளாளராக மோகன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக குமார், கொண்டசாமி, நவமணி, சின்னசாமி, ஆனந்த், துரைசாமி, குமார், என். பழனிச்சாமி, சோமசுந்தரம், மகேஷ், சண்முகம், ராஜேந்திரன், அருண் ராமசாமி, செந்தில்குமார், கோவிந்தராஜூ, முருகேசன், கே.ராமசாமி, ராமசுவாமி, கருணாநிதி, வேலுசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ரூ.1 லட்சம் கோடி
இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் ராஜா எம்.சண்முகத்திடம், முன்னாள் தலைவர் ஏ.சக்திவேல் பொறுப்புகளை ஒப்படைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.விழாவில் தலைவர் ராஜா எம்.சண்முகம் பேசியதாவது:–உழைப்பால் உயர்ந்த ஊர் திருப்பூர். தொழில் வளர்ச்சி பெற்ற இந்த ஊருக்கு நம்மால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில், தொழிலாளர் நலன், சமுதாயம் ஆகிய மூன்று வகையான பார்வைகளில் கவனம் செலுத்தப்படும். தொழில் பார்வையில் திருப்பூரில் பின்னலாடை வாரியம் அமைப்பது, டிசைனர் ஸ்டூடியோ அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். தொழிலை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்ல டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு, பயிற்சி கூடம் அமைக்கப்படும்.தொழிலாளர் நலன் என்ற பார்வையில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்படும். சமுதாய பார்வையில், ‘மூன்றாம் கண்’ திட்டம் விரிவுபடுத்தி நகர பாதுகாப்பு பலப்படுத்தும் வகையில் மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். தற்போது ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் கோடிக்கு பின்னலாடை வர்த்தகம் நடக்கிறது. 2020–ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முடிவில் பொதுச்செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment