Wednesday, September 28, 2016
திருப்பூர்,புதுப்பட திருட்டு வி.சி.டி.க்களை தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த படங்களை திருட்டு வி.சி.டி.க்களாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இதுபோன்று பதிவிறக்கம் செய்வது மற்றும் திருட்டு வி.சி.டி. பிரச்சினைகளால் இந்த தொழில் நசிந்து வருகிறது. திரையுலகின் முக்கிய பிரச்சினையான இதை பொது நலன் கருதி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் ஆன்–லைன் மூலம் புதியபடங்களை பதிவிறக்கம் செய்வதை உரிய தொழில்நுட்பங்கள் உதவியை பயன்படுத்தி தடுப்பதோடு, திருட்டு வி.சி.டி.க்களாக விற்பனை செய்வதையும் தடுத்து அந்த செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment