Wednesday, September 28, 2016
பல்லடம்பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் முற்றுகைபல்லடம் அருகே சாமளாபுரம், பூமலூர், பள்ளிபாளையம், வலையபாளையம், கிடாத்துறை புதூர், பரமசிவம்பாளையம், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் கடந்த 11–ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 18–ந் தேதி வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வந்து சேரவில்லை.அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்லடத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அத்துடன் அலுவலகத்தில் இருந்த செயற்பொறியாளர் செந்தில்குமரனிடம், இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.பரபரப்புஅதற்கு செயற்பொறியாளர் செந்தில்குமரன் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறது. நாங்களும் ஆய்வு செய்து வருகிறோம். பெரியகுமாரபாளையத்தில் வாய்க்காலை அடைத்து உங்கள் பகுதிக்கு தண்ணீர் வர திறந்துவிடப்படும். நாளை (இன்று) காலை உங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இதனால் சமாதானம் அடைந்த விவசாயிகள் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment