Wednesday, September 28, 2016
பல்லடம்பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் முற்றுகைபல்லடம் அருகே சாமளாபுரம், பூமலூர், பள்ளிபாளையம், வலையபாளையம், கிடாத்துறை புதூர், பரமசிவம்பாளையம், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் கடந்த 11–ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 18–ந் தேதி வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வந்து சேரவில்லை.அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்லடத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அத்துடன் அலுவலகத்தில் இருந்த செயற்பொறியாளர் செந்தில்குமரனிடம், இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.பரபரப்புஅதற்கு செயற்பொறியாளர் செந்தில்குமரன் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறது. நாங்களும் ஆய்வு செய்து வருகிறோம். பெரியகுமாரபாளையத்தில் வாய்க்காலை அடைத்து உங்கள் பகுதிக்கு தண்ணீர் வர திறந்துவிடப்படும். நாளை (இன்று) காலை உங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இதனால் சமாதானம் அடைந்த விவசாயிகள் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment