Wednesday, September 28, 2016
பல்லடம்பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் முற்றுகைபல்லடம் அருகே சாமளாபுரம், பூமலூர், பள்ளிபாளையம், வலையபாளையம், கிடாத்துறை புதூர், பரமசிவம்பாளையம், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் கடந்த 11–ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 18–ந் தேதி வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வந்து சேரவில்லை.அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்லடத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அத்துடன் அலுவலகத்தில் இருந்த செயற்பொறியாளர் செந்தில்குமரனிடம், இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.பரபரப்புஅதற்கு செயற்பொறியாளர் செந்தில்குமரன் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறது. நாங்களும் ஆய்வு செய்து வருகிறோம். பெரியகுமாரபாளையத்தில் வாய்க்காலை அடைத்து உங்கள் பகுதிக்கு தண்ணீர் வர திறந்துவிடப்படும். நாளை (இன்று) காலை உங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இதனால் சமாதானம் அடைந்த விவசாயிகள் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment