Wednesday, September 28, 2016

பல்லடம்பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் முற்றுகைபல்லடம் அருகே சாமளாபுரம், பூமலூர், பள்ளிபாளையம், வலையபாளையம், கிடாத்துறை புதூர், பரமசிவம்பாளையம், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் கடந்த 11–ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 18–ந் தேதி வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வந்து சேரவில்லை.அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்லடத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அத்துடன் அலுவலகத்தில் இருந்த செயற்பொறியாளர் செந்தில்குமரனிடம், இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.பரபரப்புஅதற்கு செயற்பொறியாளர் செந்தில்குமரன் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறது. நாங்களும் ஆய்வு செய்து வருகிறோம். பெரியகுமாரபாளையத்தில் வாய்க்காலை அடைத்து உங்கள் பகுதிக்கு தண்ணீர் வர திறந்துவிடப்படும். நாளை (இன்று) காலை உங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இதனால் சமாதானம் அடைந்த விவசாயிகள் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment