Wednesday, September 28, 2016
திருப்பூர்பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்றுமாலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள பி.எஸ்.என்.எல்.மெயின் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார்.பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ., போனஸ் உள்ளிட்டவை பிடித்தம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க கிளை தலைவர் குமாரவேல், செயலாளர் தங்கராஜ், தமிழ்நாடு தொலை தொடர்பு தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், பொருளாளர் விஸ்வநாதன், கிளை செயலாளர் ரமேஷ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment