Wednesday, September 28, 2016
திருப்பூர்பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்றுமாலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள பி.எஸ்.என்.எல்.மெயின் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார்.பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ., போனஸ் உள்ளிட்டவை பிடித்தம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க கிளை தலைவர் குமாரவேல், செயலாளர் தங்கராஜ், தமிழ்நாடு தொலை தொடர்பு தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், பொருளாளர் விஸ்வநாதன், கிளை செயலாளர் ரமேஷ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment