Wednesday, September 28, 2016

திருப்பூர்பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்றுமாலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள பி.எஸ்.என்.எல்.மெயின் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார்.பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ., போனஸ் உள்ளிட்டவை பிடித்தம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க கிளை தலைவர் குமாரவேல், செயலாளர் தங்கராஜ், தமிழ்நாடு தொலை தொடர்பு தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், பொருளாளர் விஸ்வநாதன், கிளை செயலாளர் ரமேஷ் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
0 comments:
Post a Comment