Thursday, September 22, 2016
திருப்பூர்: திருப்பூரில் இயங்கும் சாய, சலவை ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
அனுமதிபெறாமல் இயங்குவது, சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் நிறுவனங்களை கண்டறிந்து, "சீல்' வைப்பது, மின் இணைப்பை துண்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
பறக்கும்படை பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையிலான மாசுகட்டுப் பாடு வாரிய அதிகாரிகள், நேற்று முன்தினம், தொடர் ஆய்வு நடத்தினர். லட்சுமி நகர் பகுதியில், வாடகை கட்டடத்தில், அடுத்தடுத்து இரண்டு, பட்டன், ஜிப்களுக்கு சாயமேற்றும் நிறுவனங்கள் இயங்கின; அனுமதி பொறாமல் இயங்கிய இந்நிறுவனங்கள், பிளாஸ்டிக் டிரம் பயன்படுத்தி, பட்டன், ஜிப், லேஸ் ஆகியவற்றுக்கு சாயமேற்றி, கழிவுநீரை அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டது தெரியவந்தது. இந்த நிறுவனங்களுக்கும், அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
தொட்டிய மண்ணரையில் வேலுசாமி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில், 50 கிலோ கொள்ளளவு உள்ள "விஞ்ச்' மெஷின் வைத்து, "சேம்பிள் டையிங்' இயக்கியதால், இந்த நிறுவனத்துக்கும் "சீல்'வைக்கப்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment