Thursday, September 22, 2016
திருப்பூர்: திருப்பூரில் இயங்கும் சாய, சலவை ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்துகின்றனர்.
அனுமதிபெறாமல் இயங்குவது, சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் நிறுவனங்களை கண்டறிந்து, "சீல்' வைப்பது, மின் இணைப்பை துண்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
பறக்கும்படை பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையிலான மாசுகட்டுப் பாடு வாரிய அதிகாரிகள், நேற்று முன்தினம், தொடர் ஆய்வு நடத்தினர். லட்சுமி நகர் பகுதியில், வாடகை கட்டடத்தில், அடுத்தடுத்து இரண்டு, பட்டன், ஜிப்களுக்கு சாயமேற்றும் நிறுவனங்கள் இயங்கின; அனுமதி பொறாமல் இயங்கிய இந்நிறுவனங்கள், பிளாஸ்டிக் டிரம் பயன்படுத்தி, பட்டன், ஜிப், லேஸ் ஆகியவற்றுக்கு சாயமேற்றி, கழிவுநீரை அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டது தெரியவந்தது. இந்த நிறுவனங்களுக்கும், அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
தொட்டிய மண்ணரையில் வேலுசாமி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில், 50 கிலோ கொள்ளளவு உள்ள "விஞ்ச்' மெஷின் வைத்து, "சேம்பிள் டையிங்' இயக்கியதால், இந்த நிறுவனத்துக்கும் "சீல்'வைக்கப்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment