Thursday, September 22, 2016
திருப்பூர்: தண்ணீர் தேடி வந்த புள்ளி மான், தெரு நாய்கள் கடித்து இறந்தது. உயிருக்கு போராடிய நிலையில், மற்றொரு மான் சுற்றி வருகிறது.
அவிநாசி அருகே கோதபாளையம், வண்ணாற்றங்கரை ஓடை ஆகிய பகுதிகளில், நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள் வசிக்கின்றன. பருவ மழை பொய்த்ததால், குளம், ஓடை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. உணவு, நீர் தேவைக்காக, அங்குள்ள புள்ளி மான்கள் வழி தவறி வெளியே வருகின்றன.
மூன்று நாட்களுக்கு முன், கோதபாளையம் வஞ்சிபாளையம் ரோட்டில், ஒன்றரை வயதுடைய பெண் மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. வண்ணாற்றங்கரை ஓடை வழியாக வந்த, ஒன்றரை வயது பெண் மான், வழி தவறி, நேற்று முன்தினம் இரவு திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம், சொர்ணபுரி ரிச் லேன்ட் பகுதிக்குள் வந்துள்ளது.
அங்கிருந்த தெரு நாய்கள் மானை துரத்தி, கடித்து குதறியுள்ளன. பரிதாபமாக இறந்த மானை, வனத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனை செய்து, ஓடை பகுதியில் புதைத்தனர்.
அதேபோல், வஞ்சிபாளையம் பகுதியில், ஒன்றரை வயது ஆண் மான் ஒன்று, நாய்கள் கடித்து குதறியதில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடிய நிலையில் சுற்றி வருகிறது.
எனவே, தண்ணீர் பற்றாக்குறையை போக்க, போர்வெல் அமைத்து, அங்குள்ள தொட்டிகளில் நீர் விட்டால், மான்கள் வெளியேறுவது தடுக்கப்படும். இதற்கான நடவடிக்கையை, வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment