Thursday, September 22, 2016
திருப்பூர்: தண்ணீர் தேடி வந்த புள்ளி மான், தெரு நாய்கள் கடித்து இறந்தது. உயிருக்கு போராடிய நிலையில், மற்றொரு மான் சுற்றி வருகிறது.
அவிநாசி அருகே கோதபாளையம், வண்ணாற்றங்கரை ஓடை ஆகிய பகுதிகளில், நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள் வசிக்கின்றன. பருவ மழை பொய்த்ததால், குளம், ஓடை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. உணவு, நீர் தேவைக்காக, அங்குள்ள புள்ளி மான்கள் வழி தவறி வெளியே வருகின்றன.
மூன்று நாட்களுக்கு முன், கோதபாளையம் வஞ்சிபாளையம் ரோட்டில், ஒன்றரை வயதுடைய பெண் மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. வண்ணாற்றங்கரை ஓடை வழியாக வந்த, ஒன்றரை வயது பெண் மான், வழி தவறி, நேற்று முன்தினம் இரவு திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம், சொர்ணபுரி ரிச் லேன்ட் பகுதிக்குள் வந்துள்ளது.
அங்கிருந்த தெரு நாய்கள் மானை துரத்தி, கடித்து குதறியுள்ளன. பரிதாபமாக இறந்த மானை, வனத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனை செய்து, ஓடை பகுதியில் புதைத்தனர்.
அதேபோல், வஞ்சிபாளையம் பகுதியில், ஒன்றரை வயது ஆண் மான் ஒன்று, நாய்கள் கடித்து குதறியதில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடிய நிலையில் சுற்றி வருகிறது.
எனவே, தண்ணீர் பற்றாக்குறையை போக்க, போர்வெல் அமைத்து, அங்குள்ள தொட்டிகளில் நீர் விட்டால், மான்கள் வெளியேறுவது தடுக்கப்படும். இதற்கான நடவடிக்கையை, வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment