Thursday, September 22, 2016
திருப்பூர்: திருப்பூரில், ஏலச்சீட்டு நடத்தி, லட்சக்கணக்கில் பணம் தராமல் தலைமறைவானவர் குறித்து, "டிபாசிட்'தாரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கொங்கு மெயின் ரோடு, மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர், மாநகர போலீஸ் கமிஷனரகத்தில், மத்திய குற்றப் பிரிவு உதவி கமிஷனரிடம், நேற்று புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியுள்ளதாவது:
கொங்கு மெயின் ரோடு, மூர்த்தி நகரில், கணேஷ்ராம் என்பவர், ஸ்ரீபாலாஜி சிட் பண்ட்ஸ் என்ற சீட்டு நிறுவனம் நடத்தினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அவரிடம், திருப்பூரை சேர்ந்த பலரும், 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, பல குரூப்புகளில் ஏலச் சீட்டு சேர்ந்து, பணம் செலுத்தினோம்.
சீட்டு முதிர்வடைந்த பின்னும், தொகையை தரவில்லை. திடீரென, அவர் வீடு மற்றும் அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவரது சொந்த ஊரிலும் இல்லை. அவரது மனைவி, பதில் அளிக்காமல் எங்களை விரட்டினார். நாங்கள், 12 பேர் 20 லட்சம் ரூபாயை, பறிகொடுத்துள்ளோம். தலைமறைவாக உள்ள கணேஷ்ராமை கண்டு பிடித்து, பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment