Thursday, September 22, 2016
திருப்பூர்: திருப்பூரில், ஏலச்சீட்டு நடத்தி, லட்சக்கணக்கில் பணம் தராமல் தலைமறைவானவர் குறித்து, "டிபாசிட்'தாரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கொங்கு மெயின் ரோடு, மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர், மாநகர போலீஸ் கமிஷனரகத்தில், மத்திய குற்றப் பிரிவு உதவி கமிஷனரிடம், நேற்று புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியுள்ளதாவது:
கொங்கு மெயின் ரோடு, மூர்த்தி நகரில், கணேஷ்ராம் என்பவர், ஸ்ரீபாலாஜி சிட் பண்ட்ஸ் என்ற சீட்டு நிறுவனம் நடத்தினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த அவரிடம், திருப்பூரை சேர்ந்த பலரும், 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, பல குரூப்புகளில் ஏலச் சீட்டு சேர்ந்து, பணம் செலுத்தினோம்.
சீட்டு முதிர்வடைந்த பின்னும், தொகையை தரவில்லை. திடீரென, அவர் வீடு மற்றும் அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவரது சொந்த ஊரிலும் இல்லை. அவரது மனைவி, பதில் அளிக்காமல் எங்களை விரட்டினார். நாங்கள், 12 பேர் 20 லட்சம் ரூபாயை, பறிகொடுத்துள்ளோம். தலைமறைவாக உள்ள கணேஷ்ராமை கண்டு பிடித்து, பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Total Pageviews
News
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
 
 
  
 
 
0 comments:
Post a Comment