Wednesday, September 21, 2016
அவினாசி,அவினாசியில் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மனு கொடுத்தனர்
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயர் கோவில்காலனியை சேர்ந்த 40–க்கு மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:–ராயர் கோவில் காலனியில் 50 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி தவறாமல் செலுத்தி வருகிறோம்.இந்தநிலையில் எங்கள் பகுதியில் குடியிருந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் உங்கள் எல்லோருக்கும் இடத்தை பத்திரம் பதிவு செய்து தருகிறேன். அதற்கு பணம் செலவு ஆகும் என்றார். நாங்கள் அதை வேண்டாம் என்று கூறிவிட்டோம்.பரபரப்புஅதை மனதில் வைத்து கொண்டு எங்கள் காலனியில் ரோடு வருகிறது. எனவே வீட்டின் முன் இருக்கும் சலவைக்கல், மரம், செடி, கொடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களது பட்டாவை ரத்து செய்து விடுவேன்.என்று எங்களை மிரட்டுகிறார். எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அந்த நபரை விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment