Wednesday, September 21, 2016

அவினாசி,அவினாசியில் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மனு கொடுத்தனர்
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயர் கோவில்காலனியை சேர்ந்த 40–க்கு மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:–ராயர் கோவில் காலனியில் 50 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி தவறாமல் செலுத்தி வருகிறோம்.இந்தநிலையில் எங்கள் பகுதியில் குடியிருந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் உங்கள் எல்லோருக்கும் இடத்தை பத்திரம் பதிவு செய்து தருகிறேன். அதற்கு பணம் செலவு ஆகும் என்றார். நாங்கள் அதை வேண்டாம் என்று கூறிவிட்டோம்.பரபரப்புஅதை மனதில் வைத்து கொண்டு எங்கள் காலனியில் ரோடு வருகிறது. எனவே வீட்டின் முன் இருக்கும் சலவைக்கல், மரம், செடி, கொடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களது பட்டாவை ரத்து செய்து விடுவேன்.என்று எங்களை மிரட்டுகிறார். எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அந்த நபரை விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment