Wednesday, September 21, 2016

அவினாசி,அவினாசியில் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மனு கொடுத்தனர்
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயர் கோவில்காலனியை சேர்ந்த 40–க்கு மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:–ராயர் கோவில் காலனியில் 50 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி தவறாமல் செலுத்தி வருகிறோம்.இந்தநிலையில் எங்கள் பகுதியில் குடியிருந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் உங்கள் எல்லோருக்கும் இடத்தை பத்திரம் பதிவு செய்து தருகிறேன். அதற்கு பணம் செலவு ஆகும் என்றார். நாங்கள் அதை வேண்டாம் என்று கூறிவிட்டோம்.பரபரப்புஅதை மனதில் வைத்து கொண்டு எங்கள் காலனியில் ரோடு வருகிறது. எனவே வீட்டின் முன் இருக்கும் சலவைக்கல், மரம், செடி, கொடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களது பட்டாவை ரத்து செய்து விடுவேன்.என்று எங்களை மிரட்டுகிறார். எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அந்த நபரை விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment