Wednesday, September 21, 2016
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதையொட்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்க சுமார் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு இருந்தனர்.இந்தநிலையில், திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம்(வயது 35), அவருடைய மனைவி கார்த்திகா(28) ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் திடீரென தாங்கள் பாட்டிலில் கொண்டு வந்த டீசலை உடலில் ஊற்றி, நீதிவேண்டும், நீதிவேண்டும், எங்கள் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கார்த்திகா கையில் இருந்த டீசல் பாட்டிலை தட்டிவிட்டனர். மேலும் கார்த்திகா, ஜீவானந்தம் ஆகியோர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றியதுடன், அவர்கள் கையில் வைத்திருந்த தீப்பெட்டியையும் பிடுங்கி எறிந்தனர்.ரூ.17 லட்சம் மோசடி
பின்னர் அந்த தம்பதியை மீட்டு, போலீஸ் வேனில் ஏற்றி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய போலீஸ் விசாரணையில், அவர்கள், சாமுண்டிபுரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.17 லட்சம் கொடுத்து 4½ சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த இடத்தில் திடீரென கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மூர்த்தியிடம் ஜீவானந்தம் கேட்டபோது, அவர் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை ரூ.17 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் கடந்த 6 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும், இதனால் விரக்தி அடைந்த ஜீவானந்தம், தனது மனைவி கார்த்திகாவுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு நாளை(இன்று) வரும்படியும், அப்போது, உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment