Wednesday, September 21, 2016
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதையொட்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்க சுமார் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு இருந்தனர்.இந்தநிலையில், திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம்(வயது 35), அவருடைய மனைவி கார்த்திகா(28) ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அவர்கள் திடீரென தாங்கள் பாட்டிலில் கொண்டு வந்த டீசலை உடலில் ஊற்றி, நீதிவேண்டும், நீதிவேண்டும், எங்கள் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கார்த்திகா கையில் இருந்த டீசல் பாட்டிலை தட்டிவிட்டனர். மேலும் கார்த்திகா, ஜீவானந்தம் ஆகியோர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றியதுடன், அவர்கள் கையில் வைத்திருந்த தீப்பெட்டியையும் பிடுங்கி எறிந்தனர்.ரூ.17 லட்சம் மோசடி
பின்னர் அந்த தம்பதியை மீட்டு, போலீஸ் வேனில் ஏற்றி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய போலீஸ் விசாரணையில், அவர்கள், சாமுண்டிபுரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.17 லட்சம் கொடுத்து 4½ சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த இடத்தில் திடீரென கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மூர்த்தியிடம் ஜீவானந்தம் கேட்டபோது, அவர் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை ரூ.17 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் கடந்த 6 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும், இதனால் விரக்தி அடைந்த ஜீவானந்தம், தனது மனைவி கார்த்திகாவுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு நாளை(இன்று) வரும்படியும், அப்போது, உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment