Thursday, September 22, 2016

உடுமலைஉடுமலையில் நகராட்சி சுகாதார வளாகத்தை அதிகாரிகள் பூட்டியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புகார்கள்
உடுமலை நகராட்சி 11–வது வார்டுக்கு உட்பட்ட பை–பாஸ் ரோட்டில் உடுமலை நகராட்சி ஒருங்கிணைந்த சுகாதார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார வளாகம் உள்ளது. இங்கு கழிப்பிடம் மற்றும் குளியலறை உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை நகராட்சியின் அனுமதி பெற்று மகளிர் சுய உதவிக்குழு பராமரித்து வருகிறது.நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொது கழிப்பிடத்தை பராமரிப்பு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கழிப்பிடம், குளியலறை ஆகியவற்றை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொது மக்களிடம் இருந்து நகராட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.சாலை மறியல்
இதனைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நேற்று மதியம் சுகாதார வளாகத்திற்கு வந்தனர். சுகாதார வளாகத்தை பராமரிப்பு மேற்கொள்ள மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அனுமதியளித்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, சுகாதார வளாகத்தை நேற்றுகாலை 10 மணி முதல் நகராட்சி திருப்பி எடுத்துக்கொள்கிறது என்ற அறிவிப்பை சுகாதார வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் ஒட்டினர். பின்னர் சுகாதார வளாகத்தின் கதவை பூட்டினர். இந்த தகவல் கிடைத்ததும் ஆவேசம் அடைந்த இந்த வார்டுக்கு உட்பட்ட பழனி சாலை அருகில் வசிக்கும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.அவர்கள் சுகாதார வளாகத்தின் முன் பை–பாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் நகராட்சி நகர்நல அதிகாரி அருண், நகரமைப்பு அதிகாரி பாஸ்கரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் எங்களுக்கு கழிப்பிட வசதி தேவை. அதனால் சுகாதார வளாகத்தை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது தி.மு.க.வை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர்கள் 4 பேர் அங்கிருந்தனர். சாலை மறியலால் பை–பாஸ் ரோடு, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன.போக்குவரத்து பாதிப்பு
இதன் பின்னர் நகராட்சி அதிகாரிகள் சுகாதார வளாக பூட்டை திறந்து விட்டனர். இதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு விட்டு பொதுமக்கள் சுகாதார வளாக பகுதிக்கு சென்றனர். பின்னர் சுகாதார வளாகத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என சுய உதவிக்குழு பெண்களிடம் நகராட்சி அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் பகுதியை சேர்ந்தவர்களிடம் வசூலிப்பதில்லை என்றும், வெளியாட்கள் வந்தால் மட்டுமே அவர்களிடம் சுகாதார வளாகத்தை பராமரிப்பதற்காக கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தினர்.அப்போது அந்த வழியாக வந்த பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் சுகாதார வளாகத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment