Monday, September 12, 2016

On Monday, September 12, 2016 by Tamilnewstv in
திருச்சி 12.9.16                 
திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை  போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது
திருச்சியில் தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் தலைமையில் தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் வெளியாரை வெளியேற்று தமிழர்களுக்கு 90 சதவீத வேலை கொடுக்கவேண்டும் என்பதனை வழியுறுத்தி திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை  போரட்டம் நடை பெற்றது.
தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் கூறுகையில் திருவெறும்பூர் இரணிப்பேட்டை திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பி எச் எல் தொழிற்சாலைகளில் இப்போதுள்ள அதிகாரிகள் 80 விழுக்காட்டினர் வெளி மாநிலத்தவர்கள் தொழிலாளிகள் ஊழியர்கள் சேர்ப்பில் இப்பொழுது மிக அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்களையே சேர்ந்தவர்களையே சேர்க்கிறார்கள் பி.எச்..எல் பயின்ற பயற்சியாளர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களை அங்கு வேலையில் சேர்ப்பதில்லை.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகள் இந்திய முழுமைக்காக நடக்கிறது.அவற்றில் பல மோசடி கள் நடத்திக் தமிழ்நாட்டு மாணவர்களைத் தோல்வியுறச் செய்கின்றனர். அத்தேர்வுகளை இந்தியில் எழுதினால் அதற்காக மட்டும் 15 மதிப்பெண் வழங்கப்படுகிறதுதொடர்வண்டித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி அரியலூர் மாவட்டம் சில்லக்குடி தொடர்வண்டி நிலைய அதிகாரியாகப் பணியாற்றிய பீகாரி ஒருவர் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
இதையெல்லாம் தடுத்து நிறுத்தவே இந்த போரட்டம் இதற்கு தீர்வு காண வழிவகுக்க வேண்டுமென்றார்


பேட்டி மணியரசன்