Wednesday, January 11, 2017
On Wednesday, January 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ........ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவ-மாணவியரின் விழிப்புணர்வு பயணம்;
கலெக்டர் அலுவலக சாலை ஸ்தம்பித்ததுஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் ஆயிரக்கணக்கில் திரண்டதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கண்டோண்மெண்ட், அய்யப்பன் கோவில் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களோடு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக்கோரியும் இன்று காலை கலெக்டர் அலுவலகம் நோக்கி மாணவர்களின் பேரணிக்கு சமூக வலைதளங்களில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனையடு த்து ஆயிரத்திற்கும் அதிகமான கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் இன்று காலை திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே திரண்டனர். பீட்டா அமைப்புக்கு தடை கோரிய பேனர்கள்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரிய பேனர்களுடன் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்தும் விழிப்புணர்வு நடைபயணமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கலெக்டர் அலுவலக சாலைஸ்தம்பித்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment