Sunday, April 21, 2019

On Sunday, April 21, 2019 by Tamilnewstv   
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா முத்தையாம்பாளையம் கிராமத்தில் கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமியையொட்டி


இக்கோவிலின் திருவிழா  நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிடிகாசு எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வீசப்படும் சில்லறை காசுகளை எடுத்து வீட்டில் வைத்தால் சிறப்பு என்பதால் கூட்டத்தினர் முண்டியடித்துக்கொண்டு காசுகளை எடுக்க முயற்சித்தனர்.


இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: