Wednesday, March 04, 2020
On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297   
திருச்சி: மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த 11 மாதக் குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா வரும் அனைத்து விமானப் பயணிகளும் தீவிர மருத்துவ சோதனைக்குப் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திலும் மருத்துவக்குழுவினர் பயணிகளைத் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை மருத்துவக் குழுவினர் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது மூன்று பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் திருச்சி விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ற 11 மாதக் குழந்தை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தா் ராஜன், சேலத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த கொரோனா வைரஸ் நோய்க்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களைத் தாக்கியிருப்பது கொரோனா வைரஸா? அல்லது வேறு ஏதும் வைரஸா? என்பதை கண்டறிவதற்காக ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா வரும் அனைத்து விமானப் பயணிகளும் தீவிர மருத்துவ சோதனைக்குப் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திலும் மருத்துவக்குழுவினர் பயணிகளைத் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை மருத்துவக் குழுவினர் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது மூன்று பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் திருச்சி விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ற 11 மாதக் குழந்தை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தா் ராஜன், சேலத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த கொரோனா வைரஸ் நோய்க்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களைத் தாக்கியிருப்பது கொரோனா வைரஸா? அல்லது வேறு ஏதும் வைரஸா? என்பதை கண்டறிவதற்காக ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் மூன்று பேரும் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 


0 comments:
Post a Comment