Wednesday, March 04, 2020

On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் உறையூர் பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில்  ருத்ர ஹோமம்  நடைபெற்றது* 




ருத்ர ஹோமம் என்றால் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைப் புரியும் மும்மூர்த்திகளுள் ஒருவர், சிவபெருமான். சிவபெருமானின் அம்சமே ருத்ர மூர்த்தி வடிவம் ஆகும். ரிக் வேதம், ருத்ரனை, “வல்லவருக்குள் வல்லவர்” எனப் போற்றுகிறது. இந்த சக்தி வாய்ந்த ருத்ரனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஹோமமே, ருத்ர ஹோமம் ஆகும்.


ருத்ரனை ஆராதிக்கும் வகையில் செய்யப்படும் இந்த ஹோமம், பயம் மற்றும் கவலையைப் போக்கி, பாதுகாப்பை அளிக்க வல்லது. ருத்ரனின் அருளால், இக பர இன்பங்களை அள்ளித் தரக் கூடியது. மேலும், நவக்கிரகங்கள் எனப்படும் சக்தி வாய்ந்த ஒன்பது கோள்களை சாந்தப்படுத்தி, அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து, நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காகவும், இது மேற்கொள்ளப்படுகின்றது. இப்படிப்பட்ட ஹோமத்தை சிவாச்சாரியார்கள் இன்று பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் ஹோமம் வளர்த்தனர்

0 comments: