Tuesday, March 03, 2020

On Tuesday, March 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் இவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரது மளிகைக் கடையின் உள்ளே நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் வெடிகுண்டு வெடித்ததில் கடையில் இருந்த சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயமடைந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து புஷ்பாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

0 comments: