Monday, March 02, 2020

On Monday, March 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் முழுவதும் அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பொது மக்களை மூளை சலவை செய்து ஏமாற்றி வரும் கோடிகோடியாக பணம் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின். இதன் உரிமையாளர்கள் அழகர்சாமி (எ) ராஜா, SRK என்னும் ரமேஷ் குமார்.


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு  ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )

இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பல மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள காரணத்தினால் தொடர்ந்து பல பிரச்சினைகள் வருவதாலும் இலுப்பூர் சேர்ந்த
 ராஜப்பா தலைமையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலியான ஆவணங்களை தயாரித்து உண்மையான நிறுவனம் போல் ஜோடிப்பு செய்து அனுமதி பெற்று அவரின் கீழ் 60 லீடர் களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்து தங்கள் பல நிறுவனத்தை  வளர்க்க ( முறையான அனுமதியுடன் ? ) முயற்சி செய்து வருவதாக தகவல் பரவுகிறது. இந்நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த  யோகா குருஜி ஒருவர் எல்பின் உரிமையாளர் அழகர்சாமி என்கிற ராஜாவை சென்னை அழைத்துச் சென்று டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்துள்ளார்'

இதற்காக அந்த குருஜிக்கு  பல லட்சங்கள் கை மாறியதாக தகவல் வருகிறது. பணம் கொடுத்து டாக்டர் பட்டம் வாங்குவது தாங்கள் தூய்மையானவர்கள் எங்கள் மீது எந்த தவறும் கிடையாது என மக்களை போலியாக நம்ப வைப்பது மட்டுமே காரணம் என தெரிகிறது. போலீசை இவர்கள் மிரட்டியும் காவல்துறையினர் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது வியப்பாக உள்ளது. மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் இவ்வழக்கை கையில் எடுத்தால் மட்டுமே பல லட்சம் மக்களின் பணத்தை மீட்க முடியும். இல்லையென்றால் பல மக்களின் உயிர் தான் பரிதாபமாக பறிபோகும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள் நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்கள் என்பதும் மோசடி நிறுவனம் தற்போது வரை பல பொதுமக்களை ஏமாற்றி வருகிறது காவல்துறைக்கும் சவாலாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

0 comments: