Monday, March 02, 2020

On Monday, March 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து
மத்திய தொழிற்சங்கங்கத்தினர்   ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலம் முன்பு சி ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரெங்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில்
எல்ஐசி, பிஎச்இஎல், சேலம் ஸ்டீல், பாரத் பெட்ரோல் மற்றும்  ரயில்வே பல பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது கண்டித்தும்,  வேலைவாய்ப்பு உருவாக்காமல் தொழில் நெருக்கடியை ஏற்படுத்தி கண்டித்தும்,  முறைசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக திட்டங்களை அறிவிக்க வலியுறுத்தினர்.
இதில் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகி சுரேஷ், ஐ.என்.டி.யு.சி நிர்வாகி துனரராஜ் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த
சி ஐ.டி.யு மாவட்ட செயலாளர்
ரெங்ராஜன்,

50 கோடி முறைசாரா தொழிலாளர்கள் பணிபுரியும் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் அறிவிக்காமல், வேலை வாய்ப்பு ஏற்படுத்தாமல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காலகாலமாக தொழிலாளர்கள் அனுபவித்து வரும்
 46வகையான சட்டங்களை நாலு தொகுப்பாக 4 தொகுப்பாக மாற்றி ஒரு தொகுப்பை நிறைவேற்றி,
மேலும் வரும்  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீதமுள்ள மூன்று தொகுப்பை  நிறைவேற்ற உள்ளனர் அன்றைய தினம் இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடக்க உள்ளது நடக்க உள்ளது எனக் கூறினார்

0 comments: