Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும்  விடுதலின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி  நிவாரண உதவித்தொகை  மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படவுள்ளது. – மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்

 இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்
கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்தை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல்  இருப்பதன் பொருட்டு கொரோனா வைரஸ் நிவாரணம் 2020பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்க தமிழக முதலமைச்சர்  ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 23.03.2020அன்று நடைமுறையிலுள்ள 1224 நியாயவிலைக்கடைகளுக்கு உட்பட்ட  7,84,587 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் விடுதலின்றி பின்வரும் நடைமுறைகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 23.03.2020 அன்று நடைமுறையிலுள்ள 1224 நியாயவிலைக்கடைகளுக்கு உட்பட்ட  784587 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், (முகாமில் உள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும்) விடுதலின்றி பின்வரும் நடைமுறைகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை  மற்றும் அத்தியாவசியப்
பொருள்கள் 02.04.2020 (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும். அனைத்து நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மூலம் அவர்களது நியாய விலைக்கடைக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு வாரியாக 300குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஒவ்வொரு நாளும், ஒரு மணி நேரத்திற்கு 13கார்டுகள் வீதம் ஒரு நாளைக்கு 100குடும்ப அட்டைதாரர்களுக்கு
ரூ.1000நிவாரண தொகையும், அவர்களுக்குரிய மேற்குறிப்பிட்ட அத்தியாவசிய பொருட்களையும், அந்தந்த நியாயவிலைக்கடைகளில் சமூக விலகலை (1மீட்டர் இடைவெளி விட்டு) கடைபிடித்து விநியோகம் செய்யப்படும். மேலும் மார்ச் 2020 மாதத்திற்கு பொருட்கள் வாங்காத நபர்கள் ஏப்ரல் 2020-ல் தனியே நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.  மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை                    (0431 -2411474, 9445045618)  தொடர்பு கொண்டு புகார் அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்கள்.

0 comments: