Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 31


திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக
28நபர்கள் தனிபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில்
20நபர்களுக்கு சளி, இருமல், லேசான காய்ச்சல், இருந்ததால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் 28 நபர்கள் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.  இதில்
8நபர்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில்
5நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனையில்  கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இல்லை என வந்துள்ளது.     இன்று (31.03.2020)
20 நபர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் 13 நபர்களுக்கு இரத்தம் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.  சிகிச்சைப் பெற்று வரும் நபர்கள் தற்போது நல்ல நிலையில்  உள்ளனர்.
சாலைகளில்  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக  இருசக்கர வாகனங்களில் 1நபர்  மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
2நபர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

0 comments: