Monday, October 27, 2014
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றின் துணை ஓடைகளான சங்கிலி பள்ளம் மற்றும் ஜம்மனை பள்ளம் ஓடைகளில் காலை 6 மணி முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஓடை அருகில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை புகுந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி, மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டன. திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வருவாய் துறை அதிகாரிகளுடன் சங்கிலிப்பள்ளம், ஜம்மனை பள்ளம் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, ஆணையாளர் மா.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் தட்டான் தோட்டம், டை யமண்ட் தியேட்டர், சந்தைப் பேட்டை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மழை வெள்ளம் வீடுகளுக்குள் மேலும் புகாதவாறு ஓடைகளில் அடைப்புகளை நீக்கவும் உத்தரவிட்டனர். மேலும் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கே.வி.ஆர் நகர் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர மேயர் அ.விசாலாட்சி உத்தரவிட்டார்.
இது குறித்து திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் சங்கிலி பள்ளம், மற்றும் ஜம்மனை பள்ளம் ஓடைகளில் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே தூர்வாரி நீரோட்டம் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இதனால் இந்த ஓடைகளில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள போதும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் தாழ்வான சில பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து விடும் என்பதால் அதிகாலை 4 மணி முதல் மக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காங்கயம்புதூர் பள்ளி, கே.ஜி.கல்யாண மண்டபம், செல்லப்பபுரம் பள்ளி, எச்.எம்.எஸ்.மஹால், செம்மேடு, கருப்பகவுண்டம்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் 3069 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக் கு காலையில் இட்லி மதியம் சாப்பாடு, தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்ப்ட்டுள்ளவர்களுக்கும், ஓடைகளின் கரையில் வசிப்பவர்களுக்கும் மழைக்கால நோய்தடுப்பு சிகிச்சை மற்றும் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மழை நீர் அதிகம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் 11 ஜே.சி.,பி. இயந்திரங்கள் மூலம் வடிகால்கள் அமைத்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுவது தடுக்கப்பட்டு வருகிறது. குப்பைகள் அள்ளுவது, சாக்கடை அடைப்புகளை நீக்குவது, வெள்ளம் புகுந்த வீடுகள், வீதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு தெளிப்பது போன்ற சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும் தேவையான அளவு அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டு எந்த ஒரு அவசர நிலையிலும் மக்களுக்கு உதவ மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. பொதுமக்கள் மழை வர துவங்கிய உடனேயே தாழ்வான பகுதிகளை விட்டு, அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளிகளில் வந்து தங்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் எம்.ரவி,உதவி பொறியாளர் தமிழ்செல்வன், உதவி ஆணையாளர்கள், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சென்று இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment