Sunday, February 08, 2015
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது.
ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: சாதிக்கும் சிந்தனை வேண்டும். அறிவுப் பசி அனைவருக்கும் அவசியம். எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. குறிக்கோள், லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை அடைய 10 ஆயிரம் மணி நேரம் உழைக்க வேண்டும். சாகும்வரை படித்து கொண்டு இருக்க வேண்டும். வெற்றியின் ரகசியம் வாசிப்பது தான். பாட புத்தகங்கள் தவிர தினம் 100 பக்கம் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவருக்குள் ஏராளமான திறமைகள் உள்ளன. அதை வெளிக் கொண்டு வர வேண்டும். வாழ்வில் வெற்றி, தோல்வி வரும். தோல்விகள் அதிகம் வரும். அதற்காக மனம் தளரக்கூடாது. அது அனுபவங்களை கொடுப்பதுடன், திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார்.தியாகராஜர் கல்லுாரி செயலாளர் உமா கண்ணன், தியாகராஜர் மில் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், முதல்வர் அபய்குமார், டீன் வாசுதேவன், பதிவாளர் பழனிநாதராஜா மற்றும் பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...

0 comments:
Post a Comment