Sunday, February 08, 2015
அனைத்து சூழலிலும் வாழப் பழகவேண்டும் என, கல்லூரி
மாணவர்களுக்கு தமிழக அரசின் பணியாளர் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர்
பி.டபிள்யு.சி. டேவிதார் அறிவுறுத்தினார். டோக் பெருமாட்டி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இளநிலை, முதுநிலை மற்றும் எம்.ஃபில் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
கல்லூரி காலங்கள் முடிந்ததும் அடுத்து என்ன செய்வது, எந்த நிறுவனத்தில் பணியில் சேருவது போன்ற பல கேள்விகள் உங்கள் முன் இருக்கலாம். அதனால், எந்த ஒரு அவசரமும் இல்லாமல் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை தெளிவாகத் தேர்ந்தெடுங்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்து வாழவேண்டும். தவறு செய்துவிட்டோம் என பின்னாள்களில் வருந்த வேண்டாம். வாழ்க்கை என்றும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள் உண்டு. அதைப் பின்பற்றினால் நீங்கள் தீர்மானித்த பாதையில் உங்கள் வாழ்க்கை பயணிக்கும்.
செய்யும் வேலையை திருப்தியுடனும், முழு ஈடுபாடுடனும் செய்யுங்கள். அதுவே, உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதேபோல், வாழ்க்கையின் எல்லா தருணங்களும் உங்களுக்கு ஏற்றதாகவே அமையாது. அனைத்து சூழலிலும் வாழ பழகுங்குள். உங்கள் ஆளுமைத் திறனையும், வாழ்வின் உணர்ச்சிகளையும் ஒன்றாக குழப்ப வேண்டாம். இவை எல்லாவற்றையும் விட கடவுளின் மேல் நம்பிக்கையாய் இருங்கள். அது உங்களை என்றுமே நல்வழிப்படுத்தும் என்றார்.
விழாவில், இளநிலை மாணவிகள் 691 பேரும், முதுநிலை மாணவிகள் 167 பேரும், ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் 78 பேரும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர் பி.டபிள்யு.சி. டேவிதார் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில், கல்லூரி முதல்வர் மெர்சி புஷ்பலதா மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
0 comments:
Post a Comment