Sunday, February 08, 2015

டோக் பெருமாட்டி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இளநிலை, முதுநிலை மற்றும் எம்.ஃபில் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
கல்லூரி காலங்கள் முடிந்ததும் அடுத்து என்ன செய்வது, எந்த நிறுவனத்தில் பணியில் சேருவது போன்ற பல கேள்விகள் உங்கள் முன் இருக்கலாம். அதனால், எந்த ஒரு அவசரமும் இல்லாமல் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை தெளிவாகத் தேர்ந்தெடுங்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்து வாழவேண்டும். தவறு செய்துவிட்டோம் என பின்னாள்களில் வருந்த வேண்டாம். வாழ்க்கை என்றும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள் உண்டு. அதைப் பின்பற்றினால் நீங்கள் தீர்மானித்த பாதையில் உங்கள் வாழ்க்கை பயணிக்கும்.
செய்யும் வேலையை திருப்தியுடனும், முழு ஈடுபாடுடனும் செய்யுங்கள். அதுவே, உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதேபோல், வாழ்க்கையின் எல்லா தருணங்களும் உங்களுக்கு ஏற்றதாகவே அமையாது. அனைத்து சூழலிலும் வாழ பழகுங்குள். உங்கள் ஆளுமைத் திறனையும், வாழ்வின் உணர்ச்சிகளையும் ஒன்றாக குழப்ப வேண்டாம். இவை எல்லாவற்றையும் விட கடவுளின் மேல் நம்பிக்கையாய் இருங்கள். அது உங்களை என்றுமே நல்வழிப்படுத்தும் என்றார்.
விழாவில், இளநிலை மாணவிகள் 691 பேரும், முதுநிலை மாணவிகள் 167 பேரும், ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் 78 பேரும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர் பி.டபிள்யு.சி. டேவிதார் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில், கல்லூரி முதல்வர் மெர்சி புஷ்பலதா மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment