Sunday, February 08, 2015
அனைத்து சூழலிலும் வாழப் பழகவேண்டும் என, கல்லூரி
மாணவர்களுக்கு தமிழக அரசின் பணியாளர் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலர்
பி.டபிள்யு.சி. டேவிதார் அறிவுறுத்தினார். டோக் பெருமாட்டி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இளநிலை, முதுநிலை மற்றும் எம்.ஃபில் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
கல்லூரி காலங்கள் முடிந்ததும் அடுத்து என்ன செய்வது, எந்த நிறுவனத்தில் பணியில் சேருவது போன்ற பல கேள்விகள் உங்கள் முன் இருக்கலாம். அதனால், எந்த ஒரு அவசரமும் இல்லாமல் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை தெளிவாகத் தேர்ந்தெடுங்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்து வாழவேண்டும். தவறு செய்துவிட்டோம் என பின்னாள்களில் வருந்த வேண்டாம். வாழ்க்கை என்றும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள் உண்டு. அதைப் பின்பற்றினால் நீங்கள் தீர்மானித்த பாதையில் உங்கள் வாழ்க்கை பயணிக்கும்.
செய்யும் வேலையை திருப்தியுடனும், முழு ஈடுபாடுடனும் செய்யுங்கள். அதுவே, உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதேபோல், வாழ்க்கையின் எல்லா தருணங்களும் உங்களுக்கு ஏற்றதாகவே அமையாது. அனைத்து சூழலிலும் வாழ பழகுங்குள். உங்கள் ஆளுமைத் திறனையும், வாழ்வின் உணர்ச்சிகளையும் ஒன்றாக குழப்ப வேண்டாம். இவை எல்லாவற்றையும் விட கடவுளின் மேல் நம்பிக்கையாய் இருங்கள். அது உங்களை என்றுமே நல்வழிப்படுத்தும் என்றார்.
விழாவில், இளநிலை மாணவிகள் 691 பேரும், முதுநிலை மாணவிகள் 167 பேரும், ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் 78 பேரும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர் பி.டபிள்யு.சி. டேவிதார் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில், கல்லூரி முதல்வர் மெர்சி புஷ்பலதா மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
0 comments:
Post a Comment