Friday, February 06, 2015
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத
இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி
வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட
முன்னாள் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா 2 வழக்குகளும், தற்போதைய கலெக்டர்
சுப்பிரமணியன் 116 வழக்குகளும் மேலூர் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல்
செய்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் கோர்ட்டில் மேலும் 15 வழக்குகளை மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதியிடம் தாக்கல் செய்தார். அதில், மதுரை கிழக்கு தாலுகா பகுதிகளான பேராக்கூர், சிவலிங்கம், இடையபட்டி உள்ளிட்ட கிராமங்களிலும், மேலூர் தாலுகாவில் திருவாதவூர், இ.மலம்பட்டி, கீழவளவு, செம்மனிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் மொத்தம் 15 இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 60,652 கன மீட்டர் அளவுள்ள 1,059 கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுக்களை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாக்களில் அனுமதியின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி வேண்டி இதுவரை மொத்தம் 133 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பி.ஆர்.பி. கிரானைட் மீது மட்டும் 92 வழக்குகளும், பிற நிறுவனங்களின் மீது 41 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அப்போது, அரசு தரப்பு வக்கீல்கள் ஷீலா, ஞானகிரி, கனிமவளத் துறை மாவட்ட துணை இயக்குனர் ஆறுமுக நயினார், மேலூர் தாசில்தார் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
0 comments:
Post a Comment