Sunday, March 29, 2020

On Sunday, March 29, 2020 by Tamilnewstv in    
உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் கரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இதன் ஒரு கட்டமாக வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில்  பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் அத்துமீறி கூடுவதும், வாகனங்களில்  வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சிறிய சாலைகள் மற்றும் ஊரக பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கவும், கண்காணிக்க வும் டிரோன் கேமராக்களை காவல்துறையினர்  பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
 திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா மூலம் கிடைக்கும் காட்சிகளை கொண்டு  சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று  கூட்டத்தை கலைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments: