Monday, May 18, 2020

On Monday, May 18, 2020 by Tamilnewstv in    
எல்பின் திருச்சியில் தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களை பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி ஏமாற்றி சம்பாதிக்கும் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.

பொதுமக்கள் தற்போது இது போலி நிறுவனம் என்பதை உணர தொடங்கி உள்ளனர்.

 இதனைத்தொடர்ந்து அறம் மக்கள் நல சங்கம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி ஏழை, எளிய பொதுமக்களுக்கும் மற்ற நலிவடைந்தவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்குகிறோம் என்ற போர்வையில் வெளியில் உலா வந்து கொண்டு இருக்கின்றனர்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க தினசரி பத்திரிக்கை, உள்ளூர் தொலைக்காட்சி. தற்போது அடுத்த கட்டமாக சன் பிக்சர்ஸ் நிகராக தற்போது அறம் பிச்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் திரைப்படங்கள் தயாரித்து வருகின்றனர். ( இதில் தானே நஷ்ட கணக்கு பெரியளவில் காட்ட முடியும்) 

இவர்கள் மீது திருச்சி, தஞ்சை, மதுரை என பல ஊர்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என நாம் பலமுறை பதிவிட்டும் காவல்துறை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை. இவர்கள் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன என்பது இன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதல்வர் நிவாரண பணிக்கு ரூ.50 லட்சம் எல்பின் நிறுவனத் தலைவர் ராஜா என்னும் அழகர்சாமியின் பிறந்த நாளுக்கு இரண்டு லட்சம் பேருக்கு நலத் திட்டங்கள் என பணத்தை வாரியிறைக்கும் இவர்களுக்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை வழங்காதது ஏன் ? இதனை தமிழக காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்களை ஏமாற்றிய  இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் செய்தி பரப்புவோர் மீது கொலை முயற்சி நடத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்தது.

 தற்போது இவர்கள் நடத்தி வரும் மக்கள் ராஜ்யம் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர்கள் என்னிடம் உதவிகள் மற்றும் பணம் கேட்பார்கள் நான் அவர்களுக்குக் கொடுத்தேன், தர முடியாத சூழ்நிலையில் என்னைப் பற்றியும் எங்கள் நிறுவனம் எல்பின் பற்றியும் அவதூறாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்புகின்றனர் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் யார் யாருக்கு பணம் கொடுத்தார், என்ன காரணத்திற்காக கொடுத்தார், அவர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன, அது யாருடைய பணம் ? மக்களின் பணமா ?இவர் உழைத்து சம்பாதித்த பணமா ? என பட்டியல் வெளியிடுவாரா ?

இவர் நேர்மையாக நிதி நிறுவனம் நடத்தி வந்தால், இவர்கள் மீது முதலில் வழக்கு தொடர்ந்த நபரை இவர் ஏன் தங்களுடன் வைத்துள்ளனர். செய்தி link அனுப்பும் ஓர்  முன்னணி பத்திரிக்கையின் முன்னாள்  நிருபரை, தனது உள்ளூர் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வரும் ஒருவர் முலம் அழைத்து பல லட்சம் பேரம் பேசியது ஏன் ? 


 இவர்கள் பற்றி ஆடியோ வெளியிடும்  புதுக்கோட்டை சத்தியமூர்த்தி மீது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல்  புகார் அளித்தது ஏன் ?

இப்படி தங்களின் பத்திரிக்கையை தங்கள் சுயலாபத்திற்காக நடத்தும் நபர்கள் மக்களின் நலனை அக்கறை கொண்டிருந்தால் இவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு இவர்கள் பணத்தை திருப்பி அளித்திருப்பார்கள் வழக்கில் பார்த்துக்கொள்ளலாம் இன்று இவரால் பாதிக்கப்பட்ட நபர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதும் தங்களைப் பற்றித் தாங்களே புகழ்ச்சியாக பத்திரிகைகள் போட்டுக் கொள்வதும் தங்கள்  மேலுள்ள வழக்குகளை மறைப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பணம் பிடுங்கும் நோக்கத்துடன் நடக்கிறார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக இருந்தால் காவல்துறை அதிகாரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு புகார் கொடுக்க வேண்டியதுதானே ?பொய்யான புகார்களை வைத்தால் காவல்துறையினரிடம் அசிங்கப்பட தான் வேண்டும்.

நாங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு உதவி செய்கிறோம் என்றால் என்ன உதவி செய்துள்ளனர். எவர் எவருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளனர்,
இவர்களால் உதவி உதவி பெற்றவர்கள் யார் யார் என்ற ஆதாரத்துடன் பட்டியலிட முடியுமா? அப்படி இல்லை என்றால் தேவை இல்லாமல் இவர்கள்தான் வதந்தியை பரப்புகிறார்கள் நீதிமன்றத்தில் வழக்கு காவல்துறையால் பதியப்பட்டு உள்ள நிலையில் இவர்கள் நாங்கள் யோகிதை என்பது சொல்வது காவல்துறையை குற்றம் சாட்டுவது போன்று உள்ளது நீதித்துறையை குற்றம் சாட்டுவது போன்று உள்ளது.

இப்படியெல்லாம் பொய்யான தகவல்களை தங்கள் செய்தித்தாளில் பரப்புவதற்காக நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வருகின்றனர்.

விஷயம் மாண்புமிகு. நீதிமன்றத்திற்கு பார்வைக்கு கொண்டு சென்றாள் பத்திரிக்கை தடைசெய்யும் வாய்ப்புள்ளது என்பது நன்றாக படித்த வழக்கறிஞர்களை வைத்து ஆலோசித்து பதிவிட வேண்டும். இல்லை என்றாள் பத்திரிக்கை சட்டப்படிதடை செய்யப்படும்.
உள்ளூர் தொலைக்காட்சி என்று வைத்துக் கொண்டு தங்களுடைய தொலைக்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள செய்திகளை வெளியிடுவது எந்த சட்டத்தின் கீழ் வருகிறது என்று கூற முடியுமா ?தங்களுடைய செய்தித்தாளின் முகவரி எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவரத்துடன் வெளியிடப்படுமா?


இவர்கள் மீது  வழக்குகள் விவரம் FIR  நம்பருடன் சரியான தகவலை நாம் வெளியிட்டும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க  மத்திய மாநில அரசுகள் கண்காணித்து தான் வருகின்றது. செயின் திருட்டு வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது மூன்று வழக்குகள் இருந்தாலே சட்டப்படி அவர்கள் திருந்த  குண்டர் சட்டம் போடுகிறார்கள். இவர்கள் மீது அப்படி குண்டர் சட்டம்போடப்படுமா? பொதுமக்கள் இவர்களது மாய வலையில் சிக்காமல் இருக்க மத்திய மாநில அரசு அதிகாரிகள் இவர்களுக்கு தகவல் சொல்லும் கருப்பாடுகளை எடுத்து உடனடி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆவல்


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்)

 இதுநாள் வரை நிறுவனத்தின் மீது திருச்சி
( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தில் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்கள் இன்று வரை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற போலி நிதி  நிறுவனம் ஒன்று தில்லை நகரில் குற்றப் பொருளாதாரப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து சீல் வைக்கப்பட்டது



மேலும் பல உண்மை தகவல்கள் மற்றும் ஆதாரங்களுடன் விரைவில் சந்திப்போம்.......

 பொது மக்களை பாதுகாப்போம்........

0 comments: