Monday, May 18, 2020

On Monday, May 18, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே பேரூர் கிராமத்தில் 100 நாள் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி மாரடைப்பில் மரணம் 
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் பேரூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் போது பெண் கூலித்தொழிலாளி மாரடைப்பில் மரணம் அடைந்த சம்பவம் தொழிலாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


 முசிறி ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி அமைந்துள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திருமணத் தான் வாரியில்  உறிஞ்சு குழி அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். பேரூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி (55) என்ற பெண்ணும் ஈடுபட்டிருந்தார் அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் இதையடுத்து தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இதுகுறித்து முசிறி ஒன்றிய ஆணையர்கள் உரிய விசாரணை செய்து வருகின்றனர்

0 comments: