Tuesday, May 19, 2020

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 18

திருச்சியில் முடி திருத்தும் தொழிலாளர்கள்  மாவட்ட அலுவலகம் முற்றுகை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை
சுமார் 500க்கும் மேற்பட்டமுடி திருத்தும் தொழிலாளர்கள்
இன்று காலை  முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இந்த ஊரடங்கினால் பல்வேறு தொழில்களும் முடக்கப்பட்டு பொது மக்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து, இருக்கின்றனர்.
தற்போது சில  விதிமுறைகளால் தளர்த்தப்பட்டு பல தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் முடிதிருத்தும் தொழில் மட்டும்
அனுமதி வழங்கவில்லை திருச்சி மாவட்ட சுமார் 1500க்கு மேற்பட்ட கடைகள் உள்ளது.
 இவர்கள் தங்களது வாழ்வாதரங்காள இழந்து தவிக்கின்றனர் எனவே தமிழக அரசு தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம்தோறும் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் மேலும் மேலை நாடுகளில் உள்ளது போல வாடிக்கையாளர்களின் முகவரி அலைபேசி எண் மற்றும் அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் கருவி மூலம் நாள்தோறும் அங்குள்ள அரசிற்கு கொடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்தனர்.


பேட்டி: செல்வராஜ்
 தலைவர்,
திருச்சி மாவட்ட முடி திருத்துவோர் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்.

0 comments: