Tuesday, May 26, 2020
On Tuesday, May 26, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
காணொலிக் காட்சி மூலம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பணியில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், திருநங்கைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்புக்காக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக வாட்ஸ்அப், இணையதளம் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் வழிகளில் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ஊரடங்கு காரணமாக திருச்சி சரக காவல் எல்லைக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வரப் பெற்றது.ஊரடங்கு காரணமாக பொதுமக்களால் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
ஐந்து மாவட்ட மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை ‘கூகுள் மீட்’ செயலி மூலம் காணொலிக் காட்சி வாயிலாக பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க டிஐஜி பாலகிருஷ்ணன் முடிவு செய்தார்.இந்தக் காணொளி காட்சியில் பங்கேற்க 0431 2333909 என்ற தொலைபேசி எண்ணில் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைத் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்த நபர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் காணொலிக் காட்சி மூலம் டிஐஜி தொடர்புகொண்டு குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment