Saturday, May 16, 2020

On Saturday, May 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 16

திருச்சியில்  நிருபர் வெட்டிக்கொலை - கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு 
                 

திருச்சி தாரநல்லூர், பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நடேசன் இவரது மகன் மணி (எ) மணிகண்டன் (38)
இவருக்கு 
பழனியம்மாள் என்ற மனைவியும் ஷிவானி, சிவசாமி  மற்றும் சிவஹரி என்ற மூன்று பிள்ளைகளை கொண்டு இவர் "போலீஸ் பார்வை" என்ற மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தார்.  அதே பகுதியில் பால்ராஜ் என்பவர் சேவியர் அரிசி ஆலையில் நடத்தி வருகிறார். அங்கு முறைகேடாக  ரேஷன் கடை அரிசியை வாங்கி அதை விற்று வருவதாக அறிந்த அவர் இது குறித்து செய்தியை எடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரிசி மில் உரிமையாளர் பால்ராஜிக்கும் மணிக்கு தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30மணி அளவில் மணி விட்டிற்க்கு வந்த காம் தூக்கும்  தொழிலாளர்களான அலங்காநதபுரத்தை  சேர்ந்த ஜான், அஜித்குமார் மற்றும் பாலு ஆகியோர்  வீட்டிலிருந்த மணியை வாசலுக்கு இழுத்து வந்து அவரின் மனைவி பிள்ளைகள் கண் எதிரே சாமரியாக   வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து தகவல் திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஜான், அஜித்குமார், பாலு ஆகியோரை தேடி வருகின்றனர்

0 comments: