Saturday, May 16, 2020
On Saturday, May 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில்
மனவேதனையால் மாற்றுத் திறனாளி ரெயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.
விருதுநகர் மாவட்டம், கே.புதூர் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் வயது 36. இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில்வே ஊழியராக (கிளர்க்) வேலை பார்த்து வருவதோடு ரெயில்வே குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான காசிநாதனுக்கு அவ்வபோது மதுரைக்கும் பணிக்கு அனுப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது பொது போக்குவரத்து முடக்கத்தால் மதுரைக்கு செல்ல முடியாமல் தவித்த காசிநாதன் இன்று இரவு தான் வசித்த வீட்டில் தூக்கில் தொங்கி அந்த ஒயர் அறுந்த நிலையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீட்டில் ஒரு பேப்பரில் இறப்பிற்கான காரணம் எழுதப்பட்டிருந்தது. அதில் பொது போக்குவரத்தே இல்லாத சூழலில் மதுரைக்கு செல்லச் சொல்கிறார்கள், 120 கிலோ மீட்டர் மதுரைக்கு எப்படி செல்ல முடியும் என்ற வேதனையை கடிதத்தில் எழுதி இருந்தார்.
மாற்றுத்திறனாளியான காசிநாதன் ரெயில்வே ஊழியராக உள்ள நிலையிலும் கூட போக்குவரத்து இல்லாத சூழலில் அடுத்த இடத்திற்கு பணிக்கு செல்ல அறிவுறுத்தியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
0 comments:
Post a Comment