Saturday, May 30, 2020

On Saturday, May 30, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 30

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்
கூறுகையில் 
தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி முக்கியமல்ல அவர்களுக்கு நிவாரணத் தொகை மட்டுமே முக்கியம். எனவே, மத்திய அரசு சார்பாக ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் அதே போல் 
மாநில அரசு சார்பாக 7500ரூபாய் வழங்க வேண்டும். அதுதான் இப்போது தற்காலிக தீர்வு ஆகும் என்றார். 

மேலும் 
நேரு செய்த சாதனைகளையும் காமராஜர் அவர்கள் செய்த சாதனைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது ஆனால் ஆறு ஆண்டுகளாக மோடி பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் என்று எதுவுமே இல்லை பணமதிப்பிழப்பு மக்கள் அவதிப்பட்டது தான் அவர் ஆட்சியில் கண்ட பலன்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணையை விரைவில் முடித்து அவர் இயற்கை மரணம் அடைந்தாரா  கொலை செய்யப்பட்டாரா என்ன நடந்தது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் அத்துடன் ஜெயலலிதாவிற்காக தமிழகம் முழுக்க அவருக்கான சொத்து எவ்வளவு என்பது குறித்து தனியாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து வெளியிட வேண்டும் ஜெயலலிதாவின் சினிமா மூலம் வந்த வருமானத்தை வாரிசுதாரர்களுக்கும் மற்றும் அவர் ஆட்சியின் போது தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை  நாட்டுடமையாக்க வேண்டும் என கூறினார்.

0 comments: