Saturday, May 30, 2020

On Saturday, May 30, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 30

திருச்சி மாநகர திமுக செயற்குழு  கூட்டம் 

வருகிற ஜூன் 3ம்தேதி திமுகவின் மறைந்த முன்னாள் தலைவர் 
மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார்.

 அப்போது அவர் திருச்சி மாநகரில் கொரேனா பாதிப்பால் பல்வேறு நலத்திட்டங்களை நாம் இதுவரை வழங்கி வந்திருக்கிறோம். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் வெகு விமர்சையாக கொண்டாட விட்டாலும் எளியவர்களுக்கும் மூத்த முன்னோடிகளுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகளை நிவாரணப் பொருட்களை வழங்கி இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும். இது தான் நம் தலைவருக்கு செய்ய மரியாதை இருக்கும் என்று பேசினார் இக்கூட்டத்தில்
முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி கே.எம்.சேகரன் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், முத்துச்செல்வம், கண்ணன். இளங்கோ மோகன்தாஸ் மத்தியக் குழு பொறுப்பாளர்கள் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: