Friday, May 29, 2020

On Friday, May 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

 இந்நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் குமார் என்கிற எஸ் ஆர் கே ரமேஷ் இருவரும் மற்றும் இவர்களின் சகோதரர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இவர்களின் கைவரிசையை காட்டி தற்போது திருச்சியில் எல்பின் என்னும் போலி நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.


 இவர்களை பற்றி நாம் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகிறோம் இதற்கு முன்னால் செய்தியில் இவர்கள் பல நூறு கோடி  காசோலைகள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர்.

 காசோலை தேதி முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

 இந்நிலையில் வருமானம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நடுத்தர குடும்பத்தினர் தங்கள் தேவைக்காக முதலீடு செய்துள்ள தொகையை இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை திருப்பிக் கேட்க வரும்பொழுது  தொகையை தர மறுத்து மேலும் எல்பின் நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று  வற்புறுத்திகிறார்கள் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆனால் அவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் இவர்கள் அறிவித்தபடி உதாரணமாக ஒரு லட்சம் கட்டினால் மூன்று லட்சம் என்று அறிவித்துள்ளனர்.

 அப்படி தொகையை கொடுக்காமல் அவர்கள் முதலீடு செய்த தொகையையும் திருப்பிக் கொடுக்காமல் இருக்க இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் எஸ் ஆர் கே ஆர் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆகிய இருவரும் அடியாட்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.

 இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வலுவான நபர்களாக இருந்தால் அவர்களின் தொகையை திருப்பி பெற்றுவிடுகிறார்கள் அப்படி இல்லாத ஒரு நிலையில் சமீபத்தில் திருப்பூரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இந்நிறுவனத்தின் மீது தஞ்சையில் சமீபத்தில் வழக்குப் போடப்பட்டது .


மேலும் தஞ்சாவூரில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இவர்களிடம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று மனு அளித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்ச்சியாக தமிழகத்தில் மோசடியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
 இப்படிப் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மத்திய மாநில அரசுகள் சட்டரீதியாக தகுந்த நடவடிக்கை  எடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது 

0 comments: