Friday, May 29, 2020
On Friday, May 29, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி அருகே உள்ள சர்க்கார் பாளையம் கிராமத்தில் தாய் பசு இறந்ததால் கண்ணீர் விட்டு அழுத கன்றுக்குட்டியுடன் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் செல்வி ஏகநாதன் இவர் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் பசுங்கன்றுக்குட்டி வாங்கி வளர்த்து வந்த நிலையில் நாளடைவில் அது வளர்ந்து முதல் பருவத்தில் ஒரு காளை கன்றுக்குட்டியை ஈன்றது பின்னர் 2ம் பருவத்தில் சில நாட்களுக்கு முன் 2வதாக ஒரு பசுங்கன்றை ஈன்றது.
கடந்த 10 நாட்களாக தாய் பசு உடல் நலிவுற்ற நிலையில் இருந்ததால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தும் தாய்பசு தன் குட்டிக்கு தவறாமல் பால் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மாட்டுப் பட்டியில் நின்று கொண்டிருந்த பசு தீடீரென சரிந்து கீழே விழுந்துள்ளது. துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்த பசுங்கன்று அதன் பின் கண்ணீர் விட்டு அழ தொடங்கியது.
பசுவை தன் பிள்ளையை போல் வளர்த்த மாட்டின் உரிமையாளர் செல்வி ஏகநாதன் பசு இறந்ததை பார்த்து கதறி அழுதார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் காண்போரையும் கண் கலங்க வைத்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment