Monday, June 01, 2020
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருப்பதாகக் கூறி, திருச்சி அண்ணா சிலை ரவுண்டானா நெடுஞ்சாலைத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது.
திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் நிறுவப்பட்ட பேரறிஞா் அண்ணாவின் உருவச் சிலையை கடந்த 1968- ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக அமைச்சா்கள் மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து இப்பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது
இதனால் ரவுண்டானாவின் அளவைக் குறைக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அண்ணா சிலை ரவுண்டாவை இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா். உள்ளேயிருந்த செடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் முடிந்த பின்னா், ரூ.40 லட்சம் செலவில் மிக குறுகிய அளவிலான ரவுண்டானா இதே பகுதியில் அமைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.
திருச்சி அண்ணா சிலை ரவுண்டானாவை இடித்து அகற்றியது போன்று, போக்குவரத்து நெரிசல்களுக்கும், விபத்துகளுக்கும் காரணமாக இருக்கும் நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரிஸ்டோ ரவுண்டானா போன்றவற்றையும் இடித்து அகற்றி, அங்கு குறுகிய அளவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment