Sunday, April 04, 2021
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யுவராஜன் போட்டியிடுகிறார். இவர் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வகையில் இன்று துறையூர் நகரப்பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். அவருடன் மக்கள் நீதி மய்ய துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அருள்செல்வன், ஸ்ரீபதி, துறையூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ், வார்டு செயலாளர் மகேந்திரன், உறுப்பினர்கள் கோபிநாத், ஆனந்த் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர். அப்போது யுவராஜன் கூறுகையில், துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பல தேர்தல்களில் வேட்பாளரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதாவது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இதுவரை ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் பணியாக இந்த ஏரி தூர்வாரப்படும்.
பின்னர் அதில் தேங்கியிருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடந்த 40 ஆண்டுகளாக வைரி செட்டிபாளையத்தில் உள்ள ஜம்மேரி தூர்வாரப்படாமல் உள்ளது. துறையூரில் உள்ள ஏரிகளுக்கு இது தாய் ஏரியாகும். நான் வெற்றி பெற்றால் இந்த ஏரியையும் சுத்தம் செய்து நீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துறையூர் பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. சுத்தமான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மருவத்தூர் பகுதியில் குடிநீர் குழாய் கழிவு நீர் கால்வாய் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அசுத்த நீரை மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. பல கிராமங்கள் 60, 70 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலேயே தற்போதும் உள்ளன. அவற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment