Sunday, April 04, 2021
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யுவராஜன் போட்டியிடுகிறார். இவர் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வகையில் இன்று துறையூர் நகரப்பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். அவருடன் மக்கள் நீதி மய்ய துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அருள்செல்வன், ஸ்ரீபதி, துறையூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ், வார்டு செயலாளர் மகேந்திரன், உறுப்பினர்கள் கோபிநாத், ஆனந்த் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர். அப்போது யுவராஜன் கூறுகையில், துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பல தேர்தல்களில் வேட்பாளரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதாவது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இதுவரை ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் பணியாக இந்த ஏரி தூர்வாரப்படும்.
பின்னர் அதில் தேங்கியிருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடந்த 40 ஆண்டுகளாக வைரி செட்டிபாளையத்தில் உள்ள ஜம்மேரி தூர்வாரப்படாமல் உள்ளது. துறையூரில் உள்ள ஏரிகளுக்கு இது தாய் ஏரியாகும். நான் வெற்றி பெற்றால் இந்த ஏரியையும் சுத்தம் செய்து நீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துறையூர் பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. சுத்தமான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மருவத்தூர் பகுதியில் குடிநீர் குழாய் கழிவு நீர் கால்வாய் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அசுத்த நீரை மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. பல கிராமங்கள் 60, 70 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலேயே தற்போதும் உள்ளன. அவற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...

0 comments:
Post a Comment