Sunday, April 04, 2021
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று துறையூர் குட்டகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நான் 10 ஆண்டுகளாக காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் பொது வார்டு மற்றும் எஸ்சி வார்டுகளில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டேன். மக்களுக்கு கவுன்சிலராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் துறையூரை தனி மாவட்டமாக மாற்ற முயற்சி செய்வேன்.
அரசு கலைக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி கூடம், தொழிற்பேட்டை ஆகியவை துறையூர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் துறையூர் பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் முசிறியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துறையூருக்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் இந்திராகாந்தி ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதேபோல் திமுக சார்பில் போட்டியிடும் ஸ்டாலின் குமாரும் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர்கள் இரண்டாவது முறையாக மீண்டும் வந்து வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது துறையூருக்கு என்ன செய்தார்கள்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் முதன்முறை போட்டியிடும் புதியவரான எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் துறையூரை வளர்ச்சி நிறைந்த மாவட்டமாக மாற்றி காட்டுவேன். நான் கவுன்சிலராக இருந்த போதே மக்களுக்காக போராடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அதேபோல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் கண்டிப்பாக போராடி திட்டங்களை கொண்டு வருவேன். துறையூர் அருகே உள்ள பச்சமலைக்கு இரு வழிப் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரியை தூர் வாரி படகு சவாரி விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
பிரச்சாரத்தின் போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைச் செயலாளர் ரவி, நகர அவைத் தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சின்னவர், நிர்வாகிகள் சந்தோஷ், குகன், எம்ஜிஆர் மன்ற தலைவர் பழனிராஜன், மாவட்ட பிரதிநிதி குட்டி, கூட்டணிக் கட்சியான தேமுதிக நகர செயலாளர் சதீஷ், செல்லதுரை, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஜெர்மனியின் ஸ்பான்டாவ் பகுதியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் அன்னெகிரெக் ராவ்நிக். 10 வருடங்களுக்கு முன் தனது 55வது வயதில் 13வது குழந்த...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
0 comments:
Post a Comment