Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Monday, August 11, 2014

On Monday, August 11, 2014 by Anonymous in

தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்து சாவினை தழுவிக்கொண்ட மாவீரக் குழந்தைகளுக்கு இராணுவக் கெடுப்பிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை 6.01 இற்கு யாழ்ப்பாணத்தில் ஜப்பானின் ஜெயக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன சத்திரசிகிச்சைக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்டிடத்தின் மேல் தளத்தில் தீபம் சுடர் விட்டு எரிவதைக் கண்ட இராணுவத்தினர் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே ஓடி வந்ததால் வைத்தியசாலை வளாகம் போர்க்களமாக சில மணித்தியாலம் மாறியிருந்தது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் இன்று மாலை இராணுவத்தினர் கடும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இராணுவத்தின் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் மக்கள் தமது வீடுகளில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேவேளை நேற்று இன்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரது அடாவடித் தனங்கள் அதிகரித்துக் காணப்பட்டது.
குறிப்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா என கேட்டு இன்று மாலை இரண்டு இளைஞர்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இதை விட பல இடங்களில் இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுடர் ஏற்றப்பட்டததைத் தொடர்ந்து கடும் பதற்றம் யாழ்.நகர் பகுதியில் நிலவி வருகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை இன்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் எமது மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20131127-140806.jpg
20131127-140815.jpg
20131127-140826.jpg
20131127-140838.jpg
20131127-140845.jpg
On Monday, August 11, 2014 by Anonymous in
அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர்.


விழாவில் நெடுமாறன் பேசும்போது.. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.


அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.
On Monday, August 11, 2014 by Anonymous in
சுவிட்சலாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் களைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.
 பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு தாயக உணர்வுகளுடன் நடந்து வருகிறது.