Saturday, May 04, 2024
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் (ரஞ்சிதா,ரோஷினி, சாய் லக்ஷ்மி, ஷாலினி, சிந்து,சுஜிதா ஶ்ரீ, சன்மதி, சுமிப்ரீதி, சுவேதா, தாமரை, த்ரிஷா, வைதீஸ்வரி,) ஊரக பங்கீடு மதிப்பீடு ஏற்பாடு செய்தனர். அங்கு கிராமிய மதிப்பீடு வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான கிராமப்புற மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்கள் கிராமத்தை பற்றிய பல்வேறு தகவல்களை மாணவிகளுக்கு தெரிவித்தனர்.இந்நிகழ்வில் மாணவிகள் அகிராமத்தின் மதிப்பீடான சமூக வரைபடம், வள வரைபடம், தினசரி வேலைப்பாடு கடிகாரம், இயக்க வரைபடம், பருவ கால அட்டவணை, நலன் தரவரிசை, பிரச்சனை மரம்,அருகாமையில் உள்ள வளங்களுக்கான வென் வரைபடம், மனித உடல் வரைபடம் மற்றும் காலக்கோடு ஆகியவற்றை வரைந்து கிராமிய மதிப்பீட்டின் வரைபடம் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
செயல்முறை விளக்கம்:
இந்நிகழ்வில் அக்கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு வேளாண் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுதியதோடு விவசாயிகளுக்கு வியசாயம் சார்ந்த செயலிகள் பற்றி காட்சியளித்து எடுத்துரைத்தனர்.
0 comments:
Post a Comment